JustIn: தீயணைப்பு வீரர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.. கோபிசெட்டிபாளையம் அருகே சோகம்.! - Seithipunal
Seithipunal


தீயணைப்பு வீரர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அடசப்பாளையம் பகுதியை சார்ந்தவர் சரவணன். இவர் தீயணைப்பு வீரராக இருந்து வருகிறார். கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 

தினமும் பணியை முடித்துவிட்டு, கோபிச்செட்டிபாளையத்தில் இருந்து தனது சொந்த ஊரான அடசப்பாளையத்திற்கு சென்று மீண்டும் மறுநாள் பணிக்கு வருவது அவரது வழக்கம். இந்நிலையில், நேற்று பணியை முடித்துக்கொண்ட சரவணன் வீட்டிற்கு சென்றுள்ளார். 

வீட்டில் உள்ள அறையில் உறங்க சென்ற சரவணன், காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்க்கையில், அவர் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

சரவணனின் அறையை காவல் துறையினர் சோதனையிட்ட போது, அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில், "எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை" என்று சரவணன் எழுதியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தீயணைப்பு வீரர் சரவணனின் குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Gobichettipalayam Fire Rescue Team Officer Saravanan Suicide Died at Home 9 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->