தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை அறிவிப்பு.. ஈபிஎஸ் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

அதில் முக்கிய அறிவிப்பாக அமைச்சர் வெளியிட்டதால், வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

மத்திய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என்று சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில். தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

அப்போது, தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதன்படி, அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை என்பது மக்களை ஏமாற்றும் செயல் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

அதன்படி, 2கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், இந்த திட்டத்திற்காக இந்த நிதி ஆண்டில் 7000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அனைத்து குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கும் இந்த 1000 ரூபாய் உரிமைத் தொகை எப்படி வழங்குவார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS speech about womens rights 1000 ruppees monthly


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->