சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினீயரிங் மாணவர்...! அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இன்ஜினீயரிங் மாணவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சபரிராஜ்(23) சேலத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் சபரிராஜ் கடந்த 2020ஆம் ஆண்டு மனநிலை பாதித்த 17 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் சிறுமி இது குறித்து கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சபரிராஜை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவர் சபரிராஜுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 4000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering student who molested girl sentenced to 7 years in prison in salem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->