#திருவள்ளூர் || இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவி திடீர் தற்கொலை.. போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா(19) செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஜெயாவுடன் விடுதி அறையில் தங்கி இருந்த சகமாணவிகள் படிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது அறையில் தனியாக இருந்த ஜெயா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அறைக்கு வந்த சகமாணவிகள் இதைப்பார்த்து அதிர்ச்சடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஜெயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering college girl commits suicide in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->