சென்னை || மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வசித்து வருபவர் சுதர்சன். இவர் ஒரடகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாகவீட்டில் இருந்த படி பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று முன்தினம் சலூன் கடைக்கு சென்று முடிவெட்டி விட்டு வந்தவர் வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகனை தேடியுள்ளனர். வீடு திரும்பிய பெற்றோர் மகனின் செருப்பு கிடப்பதை பார்த்து  மொட்டைமாடிக்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்புறம் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் சுதர்சன் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineer Committed Suicide in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->