இரு குழுவாக பிரிந்து படையெடுக்கும் யானை கூட்டம்.. பீதியில் பொதுமக்கள்..!
elephant roaming in hour
தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதியை குறிவைத்து காட்டுயானை கூட்டம் படையெடுத்துள்ளது. எனவே அந்த பகுதிகளில் உள்ள வயல்களில் நெல் அறுவடையை தீவிரப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
ஓசூரில், சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள பல கிராமங்களில் பயிரிட பட்டிருக்கும் நெல் பயிர், அறுவடை காலத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தான் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஐம்பது , சானமாவு வனப்பகுதியில் முப்பது என்று காட்டு யானைகள் இருகுழுக்களாக பிரிந்து படையெடுத்துள்ளன.
இதை தொடந்து, இவை எந்த நேரத்தில் வேண்டுமெனாலும் விவசாய நிலங்களில் இறங்கி பயிர்களை சேதப்படுத்த கூடிய வாய்ப்பிருப்பதாகவும், எனவே அறுவடையை தீவிரமாக்க வனத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.