தேர்தல் கண்காணிப்பு தீவிரம்! தூத்துக்குடியில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்...! - மாவட்ட ஆட்சியர் தகவல்...!
Election monitoring intensified 1point23 crore seized Thoothukudi so far District Collector information
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமலில் இருக்கும் சூழலில், தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிர உச்சத்தை எட்டியுள்ளன.
பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் இடைவிடாத சோதனைகளில் ஈடுபட்டு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பொருள் விநியோகத்தை முற்றிலுமாக ஒடுக்க முனைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 17, 2026 வரை நடைபெற்ற கண்காணிப்பு நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கத் தொகைகள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுவதாவது,"மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத் தொகை ரூ.1 கோடியே 23 லட்சத்து 518 ஆகும்.
இதனுடன், சட்டவிரோதமாக சேமிக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்கள் ரூ.16 லட்சத்து 12 ஆயிரத்து 162 மதிப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களை கவரும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 282 மதிப்பில் சிக்கியுள்ளன.
வாக்காளர்களை பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மூலம் கவரும் முயற்சிகளை முற்றிலுமாக தடுக்க, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும், எந்த விதிமீறலுக்கும் இடமளிக்காமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Election monitoring intensified 1point23 crore seized Thoothukudi so far District Collector information