தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய கஞ்சா.!!
Election flying squad seized ganja tobacco in TN
மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழக முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று தமிழக முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ₹1.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ. 16 லட்சம் மதிப்பிலான மதுபானங்களும் தேர்தல் பிறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட 3.1 டன் புகையிலை பொருட்கள் 67 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் கடத்தி வந்த நபர்களை தேர்தல் பிறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினிடம் ஒப்படைத்தனர்.
English Summary
Election flying squad seized ganja tobacco in TN