#தூத்துக்குடி || இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறில் முதியவர் வெட்டிக் கொலை.! 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவமாயன் காலனியை சேர்ந்தவர் மீனவர் முனியசாமி(70). இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இதில் இளைய மகனுக்கு திருமணமாகி முத்துமாலை என்ற மகள்(20) உள்ளார். இந்நிலையில் முத்துமாலைக்கும் அப்பகுதியை சேர்ந்த மாரி என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதையடுத்து முத்துமாலைக்கும், மாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இதனால் முனுசாமி குடும்பத்தினருக்கும் மாரி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முனுசாமி பேத்தி முத்துமாலையை பார்ப்பதற்காக சென்றபோது அங்கிருந்த மாரிமுத்துவின் சகோதரர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மாரியின் சகோதரர் சின்னதம்பி, சேர்மன் மற்றும் அவரது உறவினர் கருப்புசாமி ஆகிய 3 பேரும் முனுசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த முனுசாமியின் குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முனுசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முனுசாமி வெட்டிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elderly man stabbed to death in family dispute in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->