அடுத்த மாவட்டத்தை டார்கெட் செய்த முதலமைச்சர்.. வரும் 28ஆம் தேதி பயணம்.!!
edappadi palanisamy going to thiruvarur
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 5,951 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6,998 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,32,454 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 107 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில், சென்னையில் இதுவரை 1,26,677 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. நேற்று மேலும் 1,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,27,949 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28-ஆம் தேதி திருவாரூர் செல்கிறார். இதுவரை கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, நெல்லை, வேலூர், திண்டுக்கல், தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
English Summary
edappadi palanisamy going to thiruvarur