#Breaking: வழக்கறிஞர்களுக்கு இரண்டு வருடத்திற்கு மாதம் ரூ.3 ஆயிரம்.. தமிழக முதல்வர் அறிவிப்பு.!!
Edappadi Palanisamy Announce Rs 3 thousand for Lawyers
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிதீவிரமாக மாற்றி பணியாற்றி வருகிறது.
ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசு பல நிவாரண உதவிகள் மற்றும் ரேஷனில் இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில், இளம் வழக்கறிஞர்களுக்கு 2 வருடத்திற்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சட்டபடிப்பை முடித்துவிட்டு பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வரும் வழக்கறிஞருக்கு மாதம் ரூ.3 ஆயரும் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Edappadi Palanisamy Announce Rs 3 thousand for Lawyers