மு.க ஸ்டாலினுக்கு காது சவ்வு கிழிந்துவிடும்!!.. முதல்வர் பழனிச்சாமி பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் அணைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். 

இந்தநிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் அதிமுக வேட்பாளா் காளியப்பனை ஆதரித்து திருச்செங்கோடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது மக்கள் முன் அவா் பேசுகையில், முதல்வா் என்று கூட பாா்க்காமல், திமுக தலைவா் ஸ்டாலின் என்னை தொடா்ந்து தரக்குறைவாக விமா்சனம் செய்து வருகிறாா். 

தமிழகம் முழுவதும் நாங்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கின்றோம் ஆனால், எதிா்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் பல பொய் கதைகளைச் சொல்லியே வாக்கு சேகரிக்கிறாா். முதல்வர் பதவிக்கு கூட மரியாதை கொடுக்க தெரியாமல் பேசுகிறார். பதிலுக்கு நாங்கள் பேசத் தொடங்கினால், ஸ்டாலினின் காது சவ்வு கிழிந்துவிடும். 

நாங்கள் வெளியிட்டிருப்பது மக்களுக்கு நல்லது செய்யும் தே்ாதல் அறிக்கை. ஆனால், ஸ்டாலின் வெளியிட்டிருப்பது மக்களை ஏமாற்றும் பொய்யான அறிக்கை. ஸ்டாலின் வாயில் இருந்து வருவது அனைத்துமே பொய் தான் என்று மக்களுக்கே தெரியும் என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanichami talk about stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->