அந்த கஷ்டம் எதற்கு... நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்... - துரைமுருகன் தடாலடி! - Seithipunal
Seithipunal


வேலூர். காட்பாடி அடுத்துள்ள கே.வி. குப்பம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட போது பேட்டி ஒன்றை அளித்தார். அதில், விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வீட்டு கதவை தட்டும் எனும் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் காட்பாடி அடுத்துள்ள காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள கால்வாய் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துறைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

அப்போது அவர், அமலாக்கத்துறை ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு, நாங்களே திறந்து வைக்கிறோம். தமிழகம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அவர் என்ன வந்து பார்த்தாரா, பெரிய வல்லுனர்களை எங்களுக்குச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan speech issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->