#திண்டுக்கல் || குடிபோதையில் மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி இளைஞர் தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் மது பாட்டிலை உடைத்து, இளைஞர் தன்னைத்தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தேனியை சேர்ந்த திப்பு சுல்தான் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கலையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் குடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து நேரம் அதிகமாக அதிகமாக குடிபோதை தலைக்கேறிய நிலையில் திப்பு சுல்தான் திடீரென மது பாட்டலை உடைத்து தன்னைத்தானே குத்திக் கொண்டார்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் திப்பு சுல்தானை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திப்பு சுல்தான் தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drunk youth attempted suicide in Dindigul


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->