கும்பகோணம் || தீக்குளித்தபடி தெருவில் ஓடிய ஓட்டுநர்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் || தீக்குளித்தபடி தெருவில் ஓடிய ஓட்டுநர்.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியைச் சோ்ந்தவர் ஓட்டுநர் ஜான் பென்னி. இவருடைய மகன் பிரவீன்குமாா். இவர் மீது கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவர், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் வெளியில் வந்தாா்.

இவரிடம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கைப்பேசி வழிப்பறி தொடா்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா். இவரைப் பார்ப்பதற்காக நேற்று மாலை காவல் நிலையத்திற்கு வந்த ஜான் பென்னி  காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளார்.

ஆனால், அவருக்கு அனுமதி அளிக்கப்படாததால் ஆத்திரமடைந்த ஜான் பொன்னி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டு சாலையில் ஓடினாா். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனே தீயை அணைத்து ஜான் பொன்னியை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த ஜான் பென்னியிடம் கும்பகோணம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நேரில் சென்று வாக்குமூலம் பதிவு செய்தாா்.

அதன் பின்னா் ஜான் பென்னி மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனை பார்க்க அனுமதிக்காததால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

driver fire to her self in kumbakonam police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->