மயிலாப்பூர் கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுனர் மரணம்! காவல்துறை விசாரணை.! - Seithipunal
Seithipunal


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையர் காவேரியின் கார் ஓட்டுனராக ஜெயச்சந்திரன் என்பர் உள்ளார். இவர் மயிலாப்பூர் அண்ணாமலை தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஜெயச்சந்திரன் வழக்கமாக பணி முடித்து வீடு திரும்பும் பொழுது மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் திருமண மண்டபத்திற்கு சென்று தனது நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்றும் அதைப்போலவே பணி முடித்து அவர் நேராக வீட்டுக்கு செல்லாமல் கற்பகாம்பாள் மண்டபத்திற்கு சென்று இருக்கிறார்.

வெகுநேரமாகியும் ஜெயச்சந்திரன் வீடு திரும்பாததால் அவரது மனைவி அந்த மண்டபத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஜெயச்சந்திரன் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஜெயச்சந்திரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஜெயச்சந்திரன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜெயச்சந்திரன் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Driver death police enquiry


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->