திருப்பூர்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோவில் ஓட்டுநா் கைது
Driver arrested for sexually harassing 9 year old girl in Tiruppur
திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமியின் உறவினர், திருமணத்திற்காக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த காரை திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன்(36) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு மணிகண்டன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமையின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Driver arrested for sexually harassing 9 year old girl in Tiruppur