மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 44 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில், சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22 ஆக இருந்த கொரோனா பதிப்பு, தற்போது 100 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் மற்றும் வார இறுதியில் பாதிப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr radhakrishnan letter increasing corona


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->