மருத்துவ மாணவியின் குடும்பமே ஒன்றுகூடி தற்கொலை!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
doctor student family sucide
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சிகரெட், பிஸ்கட் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் முகவராக இருந்துள்ளார். சுப்பிரமணியன் தன் தாயார், மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
குலசேகரம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இவரது மகள் சிவானி, ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்துள்ளார். இன்று சுப்பிரமணியின் வீட்டின் கதவு, நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே, அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களின் வீட்டின் ஜன்னலை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அவர் குடும்பத்தை சேர்ந்த நால்வரும் படுக்கையறையில் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் குடும்பத்தோடு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
English Summary
doctor student family sucide