தி.மு.க எம்.எல்.ஏவின் மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை, பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா தங்களது வீட்டில் பணியாற்றிய பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. 

அதன் அடிப்படையில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகளுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

மேலும் எம்.எல்.ஏவின் மகன், மருமகள் இருவரும் 2 வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA son daughter in law Conditional bail 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->