தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமின் மனு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆட்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி அவர்களது வீட்டில் பணியாற்றிய பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. 

இதனை அடுத்து மதிவாணன் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தலைமறைவான மதிவாணன் மற்றும் அவரது மனைவியை ஆந்திராவில் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஆட்டோ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை முதன்மை சென்சஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஜாமீன் வழக்கின் விசாரணை இன்று சென்னை முதன்மை சென்சஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தங்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது நியாயமற்றது என மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக போலீசார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகின்ற 21ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla son daughter in law bail case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->