சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக திராவிட மணி!! போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!!  - Seithipunal
Seithipunal


நீலகிரி, பந்தலூர் நெல்லியாளம் அருகே உள்ள டேன்டீ சரகம் பகுதியை சேர்ந்த திராவிடமணி (வயது 54) என்பவர் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்துள்ளார். மேலும், இது தவிர இவர் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சி குழுத்தலைவராகவும் இருந்துள்ளார்.

தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிறுவர்களுக்கு திராவிட மணி லேப்-டாப்பில் சினிமா காண்பிப்பது, கேம்ஸ் விளையாட விடுவது போன்ற சலுகைகளை செய்துவந்துள்ளார். இதேபோல வீட்டில் விளையாடிய 2 சிறுவர்களுக்கு ஒயின் கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார் திரவிடாமணி.

அதன்பிறகு, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது அந்த சிறுவனின் பெற்றோருக்கு தெரியவே இது குறித்து ஒரு சிறுவனின் தந்தை சேரம்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, இது குறித்து கேள்விப்பட்ட சைல்டு லைன் நிர்வாகிகள் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தினர். எனவே, திராவிடமணியை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk member sex torched to boy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->