அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்.. திமுக துரைமுருகன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் மீது இரண்டாம் கட்டமாக, ஆளுநரிடம் ஊழல் புகார் குறித்த தொகுப்புகளை வழங்கிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழக அமைச்சர்கள் தொடர்பான இரண்டாம்கட்ட புகார் வழங்கப்பட்டுள்ளது. இத்தனைபெற்றுக்கொண்ட தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்களை படித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

அமைச்சர்கள் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என சட்டம் சொல்கிறது. ஆனால், தமிழகத்தில் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் சரியானதா? என விசாரணை செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். 

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதனை தவிடுபிடியாக்கிவிட்டு, அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரணை செய்ய அதிகாரம் உள்ள ஆளுநருக்கு முழு அதிகாரம் வழங்குவோம். ஆளுருக்கு வழங்கப்பட்டுள்ள புகார் குறித்து காலக்கெடு நிர்ணயம் செய்ய இயலாது. அவராக நடவடிக்கை எடுப்பார் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Duraimurugan MLA Pressmeet 19 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->