தலைமையாசிரியைகளுக்கு பாலியல் தொல்லை., வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்...!!
Dismissal of Regional Education Officer who sexually harassed head teachers
தலைமை ஆசிரியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வட்டார கல்வி அலுவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3 பள்ளியின் தலைமை ஆசிரியைகள் மாவட்ட கல்வி அலுவலர் கீதாவிடம் புகார் ஒன்றை அளித்தனர்.அந்த புகாரில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தனர்.
இதனை அடுத்து அவர்களின் புகாரை பெற்று கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் கீதா வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் அருணிடம் விசாரணை நடத்தினார். மேலும், தலைமையாசிரியர்கள் கொடுத்த ஆதாரங்களும் உண்மையானதா என விசாரணை நடத்தினார்.
இதனை அடுத்து, அவர் மீது சுமத்தபட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யபடுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கருப்ப சாமி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Dismissal of Regional Education Officer who sexually harassed head teachers