திண்டுக்கல் பெண் தீக்குளித்த விவகாரம்: வீடியோ எடுத்தவரை தட்டித்தூக்கிய போலீஸ்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கே.சி.பட்டியைச் சேர்ந்த 32 வயது பெண் மாலதி. திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சதீஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு காதல் ஆகியுள்ளது. 

இவர்களுடைய காதலுக்கு சதீஷின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வர இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பாக சதீஷுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது. இதனால் மனமுடைந்த மாலதி தனது மகனுடன் தன்னுடைய காதலன் வீட்டிற்கு முன் நின்று நியாயம் கேட்டுப் போராடினார். 

அப்போது, அவர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதால், அவமானத்தில் மாலதி கண்ணீர் விட்டு அழுது பின்னர் தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் ஒரு பெண் தீக்குளிக்க முயற்சிக்கும் போது அதனை யாரும் தடுக்காமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களுக்கு ஆளானது. தாய் இறந்தது கூட தெரியாமல் அந்த சிறுவன் நிற்கதியாய் நிற்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில், இவ் வழக்கில் ஏற்கனவே ஒருவரை கைது செய்த நிலையில், காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த ச‌ர‌வ‌ண‌குமார் என்ப‌வ‌ரையும்  கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindukal suicide video capture member arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->