தமிழகத்தில் பள்ளிகள் திறந்து 5 நாளில் ஒரு அரசு பள்ளி தற்காலிகமாக மூடல்.! அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே சின்னகாந்திபுரம் அரசுபள்ளியின் 10ம்வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளி- கல்லூரிகள் இன்னும் பல மாநிலங்களில் திறக்கப்படவில்லை. 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 6, 7 மற்றும் 8 தேதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறக்க ஆதரவு தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் முதல் நாளே மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு மாதிரி பள்ளி மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வகுப்பில் பயின்ற அனைத்து மாணவிகளும் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளனர்

இந்நிலையில், திண்டுக்கல் அருகே சின்னகாந்திபுரம் அரசுபள்ளியின் 10ம்வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது.

சின்னகாந்திபுரம் அரசுபள்ளியின் 10ம்வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindugal govt school teacher affected corona


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->