காதலியை பார்க்க சென்ற வாலிபர்... கத்தியால் பதில் சொன்ன பெண்ணின் தந்தை.! திண்டுக்கல்லில் சம்பவம்.!
Dindigul youngster Murder Attempt girl Father 20 Feb 2021
காதல் விவகாரத்தில் இளைஞரை கத்தியால் குத்திய பெண்ணின் தந்தையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பூதிப்புரம் பகுதியை சார்ந்தவர் வினோத்குமார் (வயது 21). இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வரும் நிலையில், வினோத்குமார் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த பிள்ளையார் நத்தம் பகுதியை சார்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வினோத்குமார் தனது காதலியை பார்க்க பிள்ளையார் நத்தம் கிராமத்திற்கு வருகைக்கு தந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை செல்வராஜ், வினோத்தை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். பலத்த காயமடைந்து இருந்த வினோத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul youngster Murder Attempt girl Father 20 Feb 2021