திடீரென இடிந்து விழுந்த விடுதி மேற்கூரை: இடிபாடுகளில் சிக்கிய தவித்த மாணவிகள்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், ஆயக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் பழனி மற்றும் கொடைக்கானல் மலை கிராமங்களை சேர்ந்த 24 மாணவிகள் தங்கி அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். 

கடந்த 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்ட விடுதி பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து காணப்பட்டது. இன்று காலை பள்ளி சமையலர் அபிராமி என்பவர் குழந்தைகளுக்காக உணவு தயாரித்து விட்டு மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து மாணவிகள் மீது விழுந்தது. 

இதில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 7 மாணவிகள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த மாணவிகளை வெளியேற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விடுதியில் இருந்த மற்ற மாணவிகள் பாதுகாப்பு கருதி வேறொரு கட்டிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul near hostel roof collapsed 5 student injured


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->