தர்மபுரி | தொப்பூர் கொடூர விபத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தர்மபுரி, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் இரட்டை பாலம் அருகே நேற்று மாலை லாரியும் இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 8 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Thoppur accident CM MK Stalin relief announcement


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->