தர்மபுரி | தொப்பூர் கொடூர விபத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
Dharmapuri Thoppur accident CM MK Stalin relief announcement
தர்மபுரி, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் இரட்டை பாலம் அருகே நேற்று மாலை லாரியும் இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 8 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Dharmapuri Thoppur accident CM MK Stalin relief announcement