560 ஆபாச ஆடியோ உரையாடல்.. கஷ்டமர் கேரையும் விட்டுவைக்காத இச்சை.. திடுக்கென வெளிவரும் பகீர் தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியை சேர்ந்த பெண்மணி, தர்மபுரி நகர காவல் நிலையத்தில் கணவருடன் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்த புகாரில், தர்மபுரி நூலஹள்ளி பகுதியை சேர்ந்த ரவி என்பவர், எனக்கு அலைபேசியில் தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவது மற்றும் வாட்ஸ் அப்களில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவது என இருந்து வருகிறார். 

தவறான அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளீர்கள் என்று தெரிவித்தும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு இடையே, ரவியின் தொல்லை காரணமாக மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளான பெண்மணி, தனது கணவருக்கு தெரிந்த நண்பர்களின் உதவியுடன் ரவியின் வீட்டு முகவரியை கண்டறிந்து இருக்கின்றனர்.

பின்னர் ரவியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், அவனது அலைபேசி ஆய்வு செய்ததில், இந்த பெண்மணியை போல ரவியும் அவனது நண்பன் நரசிம்மன் என்பவனும் சேர்ந்து, பல பெண்களுடன் வாழ்க்கையை சீரழித்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்த விசாரணையில் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் போன்ற செயலிகளில் தர்மபுரியை சேர்ந்த திருமணமான பெண்களின் புகைப்படம் இருக்கும்பட்சத்தில், அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை, போட்டோ மாபிங் மிரட்டல் என்று பல்வேறு தொல்லைகள் வழங்கியுள்ளனர்.

இவர்களின் மிரட்டலுக்கு பயம்கொள்ளும் பெண்களின் அலைபேசி உரையாடல் மற்றும் போட்டோக்களை வைத்து, ஆசைக்கு இணங்க மிரட்டி வந்ததும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண்மணி தனது கணவருடன் கொடுத்த புகாரின் பேரில், நரசிம்மன் மற்றும் ரவியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்மணி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி புகார் அளித்த நிலையில், இந்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். 

அந்த சமயத்தில், நான் வேலூரை சேர்ந்த விஜய் என்றும், எனது தோழி சிம்ரன் என்பவருக்கு போன் செய்து தவறுதலாக அழைப்பு வந்து விட்டதாகவும் அப்பாவி போல பேசி மழுப்பியுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரவியின் அலைபேசியில் 50 க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவன் ஆபாசமாக பேசியதும், ரவி மற்றும் நரசிம்மன் ஆகியோரின் 560 ஆபாச பேச்சு தொடர்பான குரல் பதிவுகளும் இருந்தது. 

அங்குள்ள மலை கிராமமான நூலஹள்ளி பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்துகொண்டு, வாட்ஸ் அப்பில் புகைப்படம் வைத்துள்ள பெண்களை கண்டறிந்து மிஸ்கால் கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவன்களிடம் பள்ளி மாணவிகள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் திட்டமிட்டு திருமணம் முடிந்த பெண்களுக்கு தொடர்பு கொண்டு பேசி தங்களது காம இச்சையை தீர்த்துக் கொண்டதும், யாருமே பேச கிடைக்கவில்லை என்றால் கஸ்டமர் கேர் பெண்களுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதும் தெரியவந்துள்ளது. 

இவர்களுக்கு பெண்களின் அலைபேசி எண் எங்கிருந்து வந்தது? எப்படி கிடைத்தது? என்பது ரீதியான கோணத்திலும் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பெண்கள் பல விதமான பிரச்சனைகளில் சிக்கிவரும் நிலையில், கயவர்களின் நூதன முறைகள் காவல்துறையினருகே அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காமுகர்களின் கொட்டத்தை காவல்துறையினர் கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Sexual Torture Case Police Investigation Shocking Report 18 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->