14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 65 வயது கிழட்டு காமுகன் கைது.!
Dharmapuri Hogenakkal Child Sexual abused by 65 Aged Man Police Arrest
ஒகேனக்கல் அருகே எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது காமுகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 65). ஜெயகிருஷ்ணன் ஒகேனக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்றுள்ளான். இதன்போது, வனப்பகுதியை ஒட்டியுள்ள வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார்.
இதனைக்கண்ட காமுகன், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து வெளியே கூறினால், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். வேலைக்கு சென்ற பெற்றோர்கள், வீட்டிற்கு திரும்பியதும் கண்ணீர் மல்க விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காமுகன் ஜெயகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dharmapuri Hogenakkal Child Sexual abused by 65 Aged Man Police Arrest