சொத்துக்காக தந்தையை அடித்தே கொலை செய்த கொடும்பாவி மகன்.! - Seithipunal
Seithipunal


சோமனஹள்ளியில் சொத்துக்காக தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அய்யாச்சாமி. இவரது மகன் அண்ணாமலை. அய்யாசாமியின் பெயரில் 30 சென்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தினை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி, அவரது மூத்த மகன் அண்ணாமலை சண்டையிட்டு வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அண்ணாமலை, தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இந்த தகராறில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அண்ணாமலை, தனது தந்தையை அய்யாச்சாமியை கொடூரமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Father Murdered by Son due to Land Issue 9 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->