கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி உத்தரவு.!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மபசமுத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சரகத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகளை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா இரண்டு கட்டமாக விசாரணை நடத்தினார்.  

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக  பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். அதன் படி, ஐஏஎஸ் அதிகாரி அமுதா இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அதில், "பற்கள் பிடுங்கிய வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளார். அந்த அறிக்கையின் படி பல்வீர் சிங் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DGP sylendra babu order nellai balveer singh case change to CBCID


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->