வார விடுமுறை எதிரொலி - திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.!!
devotees croud increase in thiruchenthur temple
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்தக் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், வார விடுமுறையை முன்னிட்டு, இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு பொது தரிசன வரிசையில் சுமார் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், வள்ளி குகை, கடற்கரைப் பகுதி, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.
பக்தர்களின் கூட்டத்தால் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
devotees croud increase in thiruchenthur temple