சதுரகிரி மலையேறி பக்தர் மயங்கி விழுந்து பலி.!
devotee died in sathuragiri temple
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்கரையை சேர்ந்தவர் மகா. இவர் தனது உறவினரான முத்துகிருஷ்ணன் என்பவரோடு நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மலையேறினார்.
அதன் படி மகா சின்ன பசுக்களை என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மயக்கம் அடைந்த அவர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அடிவார பகுதிக்கு தகவல் கொடுக்கப்பட்டதனையடுத்து போலீசார் விரைந்துச் சென்று அவரது உடலை டோலி கட்டி கீழே கொண்டு வந்தனர்.

பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதுரகிரி மலையேறிய பக்தர் திடீரென உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
devotee died in sathuragiri temple