டெங்கு காய்ச்சலுக்கு பலியான 6 மாத குழந்தையின் தாய்.!
dengu cases death in thiruvallur mavattam
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் 6 மாத குழந்தை இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
காய்ச்சல் தீவிரமடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சங்கீதா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் டெங்குக்காய்ச்சலால் 11 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
dengu cases death in thiruvallur mavattam