வருகிற 10-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
december 10 govt leave for one district
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது.
தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.
சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிசம்பர் 01 அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். மகாதீபம் கார்த்திகை தீபத் திருவிழா நாளின் (டிசம்பர் 10ஆம் தேதி) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழா நாளான டிசம்பர் 10ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இது செய்யும் விதமாக டிசம்பர் 21ஆம் தேதி வேலை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
English Summary
december 10 govt leave for one district