கொடுத்த கடனை திரும்ப கேட்பியா.. லாரி உரிமையாளர் அடித்து கொலை...! - Seithipunal
Seithipunal


கடனை திரும்ப கேட்டதால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர்  சொந்தமாக மூன்று லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.  இவரிடம் சங்கர் என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சங்கர் வெங்கடேசனிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். நீண்ட நாள்கள் ஆனதால் வெங்கடேன் பணத்தை கேட்டுள்ளார். இதனால், சங்கருக்கும் வெங்கடேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவதன்று வெங்கடேசன் தனது பணத்தை கேட்க இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே வெங்கடேசனை அங்கிருந்த இரும்பு கம்மியால் தாக்கினார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Debt collector beaten to death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->