கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற இளம்பெண்கள்.. நீரில் மூழ்கி பரிதாப பலி..!
Death of a teenager drowning in a puddle
கல்லுகுவாரி குளிக்க சென்ற இளம்பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா (21). இவர் அதனது தோழிகளனான சரிதா, மனோரஞ்சனி மேலும் சில பெண்களுடன் அங்குள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றனர்.
அப்போது குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அபிநயா, சரிதா, மனோரஞ்சனி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த கிராம மக்கள் அவர்களை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அபிநாயா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும், மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Death of a teenager drowning in a puddle