திருநெல்வேலியில் பரபரப்பு.! தெப்பக்குளத்தில் மிதந்த வாலிபர் சடலம்... போலீசார் தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் தெப்பக்குளத்தில் வாலிபர் பிணமாக கிடந் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் சடலம் மிதந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை குளத்தில் குளிக்கச் சென்றவர்கள் வாலிபரின் பிணம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் தீயணைப்புத்துறைநீர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குளத்தில் மிதந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டார்? அல்லது யாராவது கொலை செய்து உடலை குளத்தில் வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dead body of a youth floated in Theppakulam in tirunelveli


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->