துணிகர சம்பவம்! 4 1/2 பவுன் நகையை பறித்துச் சென்ற கள்வன்...! துயரத்தில் பறிகொடுத்து பெண்...!
daring incident thief stole 4 half pounds of jewelry A woman in distress gave it away
கோவையில் கருமத்தம்பட்டியை சேர்ந்த தம்பதியான சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி துளசிமணி . இவர்கள் தங்களது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து திருப்பதிக்கு ரெயிலில் சென்றனர்.அதன் பிறகு, அவர்கள் சம்பவத்தன்று சொந்த ஊருக்கு திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த ரெயில் சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது துளசிமணி ரெயிலில் ஜன்னல் ஓரமாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றுப்பாலத்தை கடந்து ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துளசிமணி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் நகையை மர்மநபர் பறித்துவிட்டு தப்பிச்சென்றார்.அச்சமயம் திடுக்கிட்டு எழுந்த துளசிமணி "திருடன்... திருடன்..." என்று கூச்சலிட்டு அலறியுள்ளார்.
இதனால் சக பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ரெயில் ஈரோட்டை சென்றடைந்தபோது, இதுகுறித்து ஈரோடு ரெயில்வே காவலில் துளசிமணி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 4½ பவுன் நகையை மர்மநபர் பறித்துவிட்டு தப்பிய துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
daring incident thief stole 4 half pounds of jewelry A woman in distress gave it away