கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் எதிர்பார்த்த வேகத்தில் கரையைக் கடக்காமல் பல மணி நேரம் ஒரே இடத்தில் நிலை கொண்டதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. 

குறிப்பாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 30 மணிநேரம் தொடர் கனமழை பெய்தது. இதனால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த வியாழன் கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாளை டிசம்பர் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore school college leave 3 dec 2024


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->