தஞ்சாவூர் மற்றும் வேலூரை சார்ந்த நபருக்கு கரோனா உறுதி... தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு..!
corona symptoms persons in tamilnadu
உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸானது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நேற்று வரை கரோனா அறிகுறியுடன் இருந்த நபர்களின் எண்ணிக்கை 38 ஆக இருந்தது. இவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து இல்லங்களுக்கு திரும்பிய நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், தற்போது வேலூர் மற்றும் தஞ்சாவூரை சார்ந்த நபர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று வந்த கும்பகோணம் இளைஞருக்கு கரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இவருக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைப்போன்று பிரிட்டன் நாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய 49 வயது நபருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இவருக்கு வேலூர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தமிழகத்தில் காரோனா பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
corona symptoms persons in tamilnadu