எனக்கு கொரோனாவா., கோவையை அதிரவைத்த மூத்த குடிமகன்.! வேதனையில் கோவை மக்கள்.! - Seithipunal
Seithipunal


கோவை அருகே கொரோனா நோய் தொற்று உறுதியான ஒரே காரணத்திற்காக, 70 வயதான விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருக்கு வயது 70 ஆகிறது. இவர் தோட்டத்தில் விவசாயப் பணியை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக சளியுடன் காய்ச்சல் இருந்துவந்துள்ளது.

இதனையடுத்து நாச்சிமுத்து அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை செய்து முடிந்த நிலையில், அவருக்கு நோய் தொற்று உறுதி ஆகி இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்து விரக்தியடைந்த நாச்சிமுத்து, உடனடியாக 'இனி நான் உயிரோடு இருக்கக்கூடாது' என்று விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். சிறிது நேரத்தில் மயங்கி அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சுந்தரா புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாச்சிமுத்து தற்கொலை சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று உறுதியான ஒரே காரணத்திற்காக 70 வயது விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் அதனை செய்து சரி செய்து கொள்ளலாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona suicide in settipalaiyam


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->