தமிழக பாஜகவின் முக்கிய தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.

பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால், எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மற்றும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிபி ராதாகிருஷ்ணன், முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive in cp radhakrishnan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->