சென்னையில் சிக்கிய கண்டெய்னர்.. திறந்து பார்த்த தேர்தல் அதிகாரிகளுக்கு ஷாக்.!! உடனே பறிமுதல்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பாஜகவின் கொடி மற்றும் தாமரை சின்னம் பொறித்த தொப்பிகளை மூட்டை முட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை வில்லிவாக்கத்தில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட பாஜக கொடி மற்றும் தொப்பியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியை முடிவில் நடைபெற்ற வரும் நிலைய அரியானா மாநிலத்தில் இருந்து வந்த லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். 

காவல்துறையினரின் உதவியுடன் தேர்தல் பிறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் கண்டெய்னர் முழுவதும் மூட்டை மூட்டையாக பாஜகவின் கொடி மற்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து லாரியில் இருந்த நபர்களையும் ஓட்டுனரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பொருட்கள் எங்கிருந்து யாருக்காக கொண்டுவரப்பட்டது என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வடசென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்களுக்காகவும் மத்திய சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்திற்காகவும் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Container lorry carrying BJP flag hat with lotus symbol seizedin Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->