பிரபாகரன் நலமாக இருக்கிறாரா? மக்களை குழப்பும் பேச்சு இது - காங்கிரஸ் எம்பி விமர்சனம்!
Congress MP Say About Prabhakaran Issue
"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் நலமாக இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் மக்களை குழப்ப பார்க்கிறார்" என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் நலமாக இருப்பதாக நேற்று பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி அளித்திருந்தார்.
இதுகுறித்து, தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வைகோ, சீமான் வெளியிட்ட கருத்துக்கள் பல்வேறு விவாதங்களை உருவாக்கியது.
பிரபாகரன் நலமுடன் இருப்பதை வரவேற்றுத் சில தலைவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதே சமயத்தில் ஒரு சில தலைவர்கள், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கூறி பழ.நெடுமாறன் மக்களை குழப்புகிறார்" என்று தெரிவித்தார்.
English Summary
Congress MP Say About Prabhakaran Issue