நாங்குநேரி : அரிவாளால் வெட்டி காயமடைந்த மாணவருக்கு காங்கிரஸ் கட்சியினர் நிதியுதவி.!
Congress donation to nanguneri issue
நாங்குநேரியில் அரிவாளால் வெட்டி காயமடைந்த அண்ணன், தம்பிக்கு காங்கிரஸ் கட்சியினர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார், மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அண்ணன் தங்கை மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், ரூ.50,000 நிதி உதவியை வழங்கியுள்ளனர்.
English Summary
Congress donation to nanguneri issue