ரோகிணி தியேட்டருக்கு எதிரே பட்டா கத்தியுடன் சிக்கிய கல்லூரி மாணவர் - போலீசார் விசாரணை.!
college students arrested with knief in koyambed
சென்னை ரோகிணி திரையரங்கம் எதிரே கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டா கத்தியுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியான கோயம்பேட்டில் ரோகிணி திரையரங்கம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்பகுதி வழியாக வந்துள்ளனர். இதைபார்த்த கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட முற்பட்டனர்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த மாணவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். இதையடுத்து போலீசார் பிடிபட்ட மாணவரிடம்விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் நான்கு பட்டா கத்திகள் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் அந்த மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், மாணவர் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் வெற்றிவேல் என்பதும், பட்டாகத்திகள் இருந்த பையை அவரது நண்பர் கொடுத்து வைத்திருக்க சொன்னதும் தெரிய வந்தது. அதன் படி மாணவர் வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
English Summary
college students arrested with knief in koyambed