திருமணம் செய்து கல்லூரிக்கு சென்ற இளம்பெண்... தோழிகள் கிண்டல் செய்ததால் இளம்பெண் தற்கொலை...!
College Student Commites Suicide In Thiruvallur
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ரோணிஷா என்பவருடன் கடந்த மூன்று மாதத்திற்கு முன் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. மோனிஷா அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
இன்னிலையில் நேற்று அகிலன் வேலைக்கு சென்று விடவே இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரது நாத்தனார் மதியம் சுனிதாவை பார்க்க அவரது வீட்டிற்கு சென்ற போது கதவு பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்க்கும் பொழுது ஒரு அழகிய ரோனிஷா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முதற்கட்ட விசாரணையில் போலீசாருக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை எனவும் திருமணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்ததால் அவரது தோழிகள் கிண்டல் செய்துள்ளனர் எனவும் தெரியவந்தது இதனை அடுத்து மன உளைச்சலை அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
English Summary
College Student Commites Suicide In Thiruvallur